சொற்க்களை அம்புகளாய் எய்து எண்ணங்களை கேடயமாய் வெய்து அன்பினை வாளாய் பிடித்து உணர்வுகளை காக்க போராடினேன் குருதி சிந்தி ஊண் சிதையும் களப்போரும் முடிவுக்கு வருமே கண்ணீர் சிந்தி உள்ளம் சிதையும் மனப்போர் வந்திடுமோ ஓர் முடிவிற்கு உள்ளத்தில் நடக்கும் போராட்டம் இது சிந்தனை சிதறும் கைகள் பதறும் வார்த்தை குளரும் உடலெங்கும் நடுங்கும் கண்களும் சுனை போல் ஆகும் கண்ணீர் சுரக்க தலை கணக்கும் சுயநலமும் உணர்ச்சிகளை மிதிக்கும் தலைகணமும் காதலை மதியாத உணர்ச்சிகளும் விட்டு கொடுக்க தெரியாத காதலும் போகுமே மண்ணிற்கு கீழே சிதைந்த உள்ளத்தின் அருகில் உருகுலைக்குமே இறந்தபின்னும் விடாது நிம்மதியாய் புதைய
காலமும் நேரமும் செய்யாத சூழ்ச்சிகள் இல்லை. அவை நிகழ்த்தாத சம்பவங்கள் இல்லை. அவற்றுள் மனம் நிறைக்கும் இன்பமும் உண்டு தொண்டை அடைக்கும் துக்கமும் உண்டு. பொங்கி வரும் உணர்ச்சிகளாய் எழுத்துகளை மாற்றுகிறேன், அவற்றை இங்கு மின் வலையில் பகிர்கிறேன்