வாழ்கை புத்தகம் பக்கங்கள் கொஞ்சம் அதிலும் நற்பக்கங்கள் மிகவும் கொஞ்சம் மிக சிறந்த வாழ்நாட்கள் நிலைக்கும் சில நாட்களே அதனை உணர்ந்தேன் அப்பக்கம் திருப்பும் பொழுது எழுத துடிக்கும் கைகள் வார்த்தைகள் இல்லா தருணம் வெளியே வர மறுக்கும் கண்ணீர் நினைவுகளை புதயலாக்கும் இதயம் இந்த நிமிடம் உலகம் நின்றிடாதா !!
காலமும் நேரமும் செய்யாத சூழ்ச்சிகள் இல்லை. அவை நிகழ்த்தாத சம்பவங்கள் இல்லை. அவற்றுள் மனம் நிறைக்கும் இன்பமும் உண்டு தொண்டை அடைக்கும் துக்கமும் உண்டு. பொங்கி வரும் உணர்ச்சிகளாய் எழுத்துகளை மாற்றுகிறேன், அவற்றை இங்கு மின் வலையில் பகிர்கிறேன்