அடர்ந்த மரங்கள் நடுவில் தென்றல் புகுந்து செல்வதுபோல் துளைக்க முடியாத என் இதயத்தில் நீ புகுந்து சென்றாயே வறண்ட நிலத்தில் ஒரு துளி நீர் பெய்தாற்போல் யாரும் அமரா என் இதயத்தில் நீ இளைப்பாறி சென்றாயே பருகியது என் விதை அந்த ஓர் துளியை வளர்ந்தது என் வேர் அந்த ஓர் துளியில் முளைத்த கன்றை துளிர்க்க விடாது வேரோடு கிள்ளி எறிவதேனோ
காலமும் நேரமும் செய்யாத சூழ்ச்சிகள் இல்லை. அவை நிகழ்த்தாத சம்பவங்கள் இல்லை. அவற்றுள் மனம் நிறைக்கும் இன்பமும் உண்டு தொண்டை அடைக்கும் துக்கமும் உண்டு. பொங்கி வரும் உணர்ச்சிகளாய் எழுத்துகளை மாற்றுகிறேன், அவற்றை இங்கு மின் வலையில் பகிர்கிறேன்