Skip to main content

Posts

Showing posts from November, 2014

தனிப்பயணம்

அன்றொரு நாள் மாலை பொழுது என்னை மறந்து தென்றல் காற்றில் நானும் நடந்தேன் கடற்கரையோரம் என் வாழ்க்கை போகும் பாதையை ஆவல் பெருக்கின் உச்சத்தில் பார்க்க நினைத்தேன் நானும் சற்றே என் கால்களை மெல்ல தூக்கி மறையும் சூரிய காவி கதிர்கள் மாறியது இருட்கதிர்களாய் மேனியை மெல்லியதாய் தொட்ட தென்றலும் புயலாய் மாறியது நாவரண்டு நீரோடியது என் நெற்றியில் பாய்ந்தது முதுகு தண்டில் மின்சாரம் அச்சம் இருளையும் காட்டி வேகமாய் என்னை ஆகொண்டது தூரத்தில் ஓர் ஒளி வட்டம் – என்னை ஓட ஊன்றியது அதனை நோக்கி போகும் பாதையெல்லாம் கேட்டது அழுகையின் ஓலங்கள் பெற்றார் உற்றார் நண்பர்கள் வாழ்வில் நான் கண்ட முகங்கள் யாவையும் ஓடும் வழிதனிலே கண்டேன் பிம்பங்களாய் ஓடினேன் வேகமாய் இருளை கண்டு ஓடினேன் வேகமாய் அழுகையை கேட்டு ஓடினேன் வேகமாய் பிம்பங்களை கண்டு ஓடினேன் அச்சத்தின் உச்சத்தில் தூர கண்ட வெண் ஒளி பெரியதாய் பெரியதாய் வளர்ந்தது அடைந்தேன் அவ்விடத்தை படர்ந்தது ஒளி என்னை சுற்றி சிரித்தேன் அழுதேன் அந்த ஒரு நிமிடம் இடம் புரியா இன்பம் அது பயம் மறைந்த நிமிட