காரணம் இன்றி ஒளி மங்கும் என் கண்களை கசக்குகிறேன் நேர் கோட்டில் செல்லும் என் எண்ணங்கள் சற்றே தடம் மாறுகின்றன மேனி சற்றே சிலிர்க்க உள்ளங்கைகள் இதமாக என் கன்னங்களை தழுவிய உன் உதடுகளின் வருடல்கள் உணர்ந்தேன் ஏதோ தொலைத்த வருத்தம் ஏதோ தொலையும் அச்சம் தொலைத்த துடிப்புகள் திரும்ப கிடைக்காதா என்ற ஏக்கம் வாழ்கை கடிகாரத்தை திருப்ப நினைக்கிறன் உன்னோடு வாழ்ந்த அந்த நொடிகளை திரும்ப பெற அல்ல உன்னை தொலைத்து நிற்கும் இந்த நொடியினை அழித்து விட்டு உன்னை பெற என் ஏட்டில் பதிந்த ஒரே அச்சு நீ!
காலமும் நேரமும் செய்யாத சூழ்ச்சிகள் இல்லை. அவை நிகழ்த்தாத சம்பவங்கள் இல்லை. அவற்றுள் மனம் நிறைக்கும் இன்பமும் உண்டு தொண்டை அடைக்கும் துக்கமும் உண்டு. பொங்கி வரும் உணர்ச்சிகளாய் எழுத்துகளை மாற்றுகிறேன், அவற்றை இங்கு மின் வலையில் பகிர்கிறேன்