நகமும் சதையும் எலும்பும் தோலும் நட்பின் அடையாளம் இடையில் ஊடுருவும் குருதி காதல் நடுவில் வெளி வந்து கவனங்களை திருப்பி பிரிக்க முடியாதவைகளை பிரித்து சீக்கிரம் வற்றிவிடும் ஆனால் பிரிந்தவை சேர நாட்கள் ஆகும் சில நேரங்கள் சேராமலேபோகும்
காலமும் நேரமும் செய்யாத சூழ்ச்சிகள் இல்லை. அவை நிகழ்த்தாத சம்பவங்கள் இல்லை. அவற்றுள் மனம் நிறைக்கும் இன்பமும் உண்டு தொண்டை அடைக்கும் துக்கமும் உண்டு. பொங்கி வரும் உணர்ச்சிகளாய் எழுத்துகளை மாற்றுகிறேன், அவற்றை இங்கு மின் வலையில் பகிர்கிறேன்