Skip to main content

தனிப்பயணம்


அன்றொரு நாள்
மாலை பொழுது
என்னை மறந்து தென்றல் காற்றில்
நானும் நடந்தேன் கடற்கரையோரம்

என் வாழ்க்கை போகும் பாதையை
ஆவல் பெருக்கின் உச்சத்தில்
பார்க்க நினைத்தேன் நானும் சற்றே
என் கால்களை மெல்ல தூக்கி

மறையும் சூரிய காவி கதிர்கள்
மாறியது இருட்கதிர்களாய்
மேனியை மெல்லியதாய் தொட்ட
தென்றலும் புயலாய் மாறியது

நாவரண்டு நீரோடியது என் நெற்றியில்
பாய்ந்தது முதுகு தண்டில் மின்சாரம்
அச்சம் இருளையும் காட்டி
வேகமாய் என்னை ஆகொண்டது

தூரத்தில் ஓர் ஒளி வட்டம் – என்னை
ஓட ஊன்றியது அதனை நோக்கி
போகும் பாதையெல்லாம்
கேட்டது அழுகையின் ஓலங்கள்

பெற்றார் உற்றார் நண்பர்கள்
வாழ்வில் நான் கண்ட முகங்கள்
யாவையும் ஓடும் வழிதனிலே
கண்டேன் பிம்பங்களாய்

ஓடினேன் வேகமாய் இருளை கண்டு
ஓடினேன் வேகமாய் அழுகையை கேட்டு
ஓடினேன் வேகமாய் பிம்பங்களை கண்டு
ஓடினேன் அச்சத்தின் உச்சத்தில்

தூர கண்ட வெண் ஒளி
பெரியதாய் பெரியதாய் வளர்ந்தது
அடைந்தேன் அவ்விடத்தை
படர்ந்தது ஒளி என்னை சுற்றி

சிரித்தேன் அழுதேன் அந்த ஒரு நிமிடம்
இடம் புரியா இன்பம் அது
பயம் மறைந்த நிமிடம் அது
பெருமூச்சு விட்டேன் சற்றே கலைந்தது என் கனவு

ஓடினேன் உண்மை
இருள் உண்மை
பயம் உண்மை – இறுதியில்
இன்புட்றதும் உண்மை

ஓடினேன் வேகமாய் வாழ்கை வெளிச்சத்தை  நோக்கி
ஓடினேன் வேகமாய் எதிர் காலத்தை வெண் ஒளியை நோக்கி
ஓடினேன் வேகமாய் கடந்த கால இருளை கண்டு
ஓடினேன் வாழ்கையை வென்றுவிட

Comments

Popular posts from this blog

நட்பு

தண்டவாளங்கள் இரண்டு எங்கோ சிறிது தூரம் ஒன்றாய் செல்லும் நட்பெனும் தண்டவாளங்களும் சேர்ந்து சென்றால் தான் நண்பர்கள் வாழ்க்கை பயணத்தின் அப்பகுதியை கடக்க முடியும் பிரியும் நேரம் வரின் தங்கள் பாதையை நோக்கி அவை பிரியும் ஒன்றாய் முழு நேரமும் இருக்க நினைத்தால் மாறி போகுமே அவற்றின் சேரிடம் நிலை எதுவும் இல்ல இருக்கும் வரை நட்பை போற்ற நினை மனமே பிரியும் நேரத்தில் பெரிதாய் வருந்தாதே பிரிவு உனக்கு மட்டும் அல்ல மற்றவருக்கும் நல்லதுவே!

நினைவுகள்

சுவர்கள் நான்கின் நடுவே தனியாய் இருத்தல் பயம் அல்ல நினைவுகள் வாழும் ஓர் அறையில் துணிந்து செல்ல முடியவில்லை நீ இருந்த இடம் இன்று காலியாய் இருக்கும் ஆனால் உன் பிம்பம்கள் என்னை வேலியை சுற்றி வருகிறதே உன் வாசம் மறையவில்லை உன் குரலின் எதிரொலி குறையவில்லை நான் பேசும் போதெல்லாம் உன் குரல் கேட்கிறதே நம் இனிமை நினைவுகளை நினைக்கிறன் என் கண்களில் காவிரி பெருக்க

வாழ்கையின் கோணங்கள்

எங்கெங்கோ பிறந்தவர்களை ஒன்று சேர்க்கும் தொடர்பேதும் இல்லாதவர்களை இணைக்கும் நடமாடும் வேலை தன்னில் பாதையை மறைக்கும் கால்கள் சோர்வடையும் பொது புதிய பாதை தோன்றும் உணர்வுகள் இல்லாதவருக்கும் காதல் தாக்கும் ஆசை பாசம் இருப்பவருக்கும் உண்மை நட்பு கூட கிடைக்காது பணம் இருப்பவனிடம் திறமை இருக்காது திறமை இருப்பவனிடம் பணம் இருக்காது உறவு பிரியனிடம் பணம் இருக்கும் பணப்பிரியனிடம் உறவு நிலைக்காது இவை எல்லாம் வாழ்கையின் கோணங்கள்!! எந்நேரமும் எதுவாயினும் நடப்பின்’ கவலை கொல்லாதே மனமே இன்றொரு சந்தர்பம் போயின் பின்னொரு நாள் மற்றொன்று வந்து சேரும் பி. கு. தேர்வு அறையில் யோசித்து கொண்டு இருந்த பொது உதயமானது இந்த சிந்தனை. எப்படி படித்து சென்றாலும் எனக்கு தெரிந்த கேள்விகளே வருவதில்லை. வாழ்கை கற்றுதந்த பாடம்.