பொங்கி வரும் உள்ள அலைகளை
வடிக்க விழையும் தருணந்தநில்
சினங்காக்க முடியாது
கிழித்து எறிகிறேன் காகிதத்தை
நட்பு காதல் பாசமெல்லாம்
கதைகளில் கேட்ட கருமங்களே
கனவு கலையும் வேளையில்
உண்மை காலடி தரம் பெறாது
காதல் சுகம் பொறுத்தது
காலம் மாற காதலும் மாறும்
பாசம் இதம் பொறுத்தது
பாதை மாற பாசமும் மாறும்
நட்பு நம்பிக்கை பொறுத்தது
நடத்தை மாற நட்பும் மாறும்
நம்பிக்கை என்னை பொறுத்தது
மரியாதை இருக்கும் வறை
அடித்தடமாம் அன்பு
இம்மூவுணர்ச்சிகளுக்கும்
சுய நலம் கொண்ட அன்பு
தரம் கெட்டதென்பேன் நான்
சுகம் கண்டு ஓடுகின்ற அன்பையும்
பாசம் கொண்டு பின்னே ஓடிவரும் அன்பையும்
ஒப்புமை பார்க்க தராசில் வைத்தால்
விழுந்து அடிபடுவது ஓடிவரும் அன்பே
விழுந்து எழுந்து சுதார்ச்சித்தாலும்
கண்ணை மூடி ஓடத்துடங்குமே
ஓடுகின்ற அன்பும் ஒருதலை
ஓடிவரும் அன்புதானோ
ஒன்றன் பின் ஒன்றாய்
மந்தை போல் சுற்றி சுற்றி
வட்டமாய் விழுந்து எழும்
மந்தைதான் இந்த அன்பு
சுற்றுவதை நிருத்தி
பின்னே திரும்பிப் பார்த்தால்
தெரியும் பூவை சுமக்கும்
சாணத்தின் வாசனை
வடிக்க விழையும் தருணந்தநில்
சினங்காக்க முடியாது
கிழித்து எறிகிறேன் காகிதத்தை
நட்பு காதல் பாசமெல்லாம்
கதைகளில் கேட்ட கருமங்களே
கனவு கலையும் வேளையில்
உண்மை காலடி தரம் பெறாது
காதல் சுகம் பொறுத்தது
காலம் மாற காதலும் மாறும்
பாசம் இதம் பொறுத்தது
பாதை மாற பாசமும் மாறும்
நட்பு நம்பிக்கை பொறுத்தது
நடத்தை மாற நட்பும் மாறும்
நம்பிக்கை என்னை பொறுத்தது
மரியாதை இருக்கும் வறை
அடித்தடமாம் அன்பு
இம்மூவுணர்ச்சிகளுக்கும்
சுய நலம் கொண்ட அன்பு
தரம் கெட்டதென்பேன் நான்
சுகம் கண்டு ஓடுகின்ற அன்பையும்
பாசம் கொண்டு பின்னே ஓடிவரும் அன்பையும்
ஒப்புமை பார்க்க தராசில் வைத்தால்
விழுந்து அடிபடுவது ஓடிவரும் அன்பே
விழுந்து எழுந்து சுதார்ச்சித்தாலும்
கண்ணை மூடி ஓடத்துடங்குமே
ஓடுகின்ற அன்பும் ஒருதலை
ஓடிவரும் அன்புதானோ
ஒன்றன் பின் ஒன்றாய்
மந்தை போல் சுற்றி சுற்றி
வட்டமாய் விழுந்து எழும்
மந்தைதான் இந்த அன்பு
சுற்றுவதை நிருத்தி
பின்னே திரும்பிப் பார்த்தால்
தெரியும் பூவை சுமக்கும்
சாணத்தின் வாசனை
Lovely, Vignesh. Thanks for sharing your words and thoughts with us. Keep writing, you have a real gift :)
ReplyDeleteஇதில் சாணமாகிப்போனவர்கள் அதிகம், சாணம் பயன்படுவது போல் காய்ந்த பூக்கள் பயன் படுவது இல்லை.. வாழ்த்துகள்.
ReplyDelete