கவிதையில் பாடினால் என்ன
கதையில் வடித்தால் என்ன
உள்ளம் படும் வலியை
புரிய வைப்பது கடினம்
நேசம் அன்பு பண்பு எல்லாம்
கோவத்தின் நிழலினிலே
அன்பும் அபிமானமும் வேண்டாம்
ஆனால் மனிதாபிமானம் வேண்டாமா
உன் இதயம் நிமிடத்தில் நூறு முறை துடித்தாலும்
என் கடுமையும் கோபமும் உன் மேல் குறையாது
இது இன்றைய உலகின் அன்பு
இதை நடத்தும் மனிதம் உண்டு
எங்கே மறைந்தது பாசம்
எங்கே தொலைந்தது பண்பு
எங்கே சிதைந்தது நேசம்
இங்கே மறைந்தது அன்பு
சுற்றுச்சூழலின் மாசு விலகலாம்
நதி நீர் எல்லாம் ஒன்று சேரலாம்
செல்வமும் சிறப்பும் பெருகி நிரயலாம்
மனிதம் ஆகுமே அனாதையாய்
Comments
Post a Comment