Skip to main content

அனாதை


கவிதையில் பாடினால் என்ன
கதையில் வடித்தால் என்ன
உள்ளம் படும் வலியை
புரிய வைப்பது கடினம்

நேசம் அன்பு பண்பு எல்லாம்
கோவத்தின் நிழலினிலே
அன்பும் அபிமானமும் வேண்டாம்
ஆனால் மனிதாபிமானம் வேண்டாமா

உன் இதயம் நிமிடத்தில் நூறு முறை துடித்தாலும்
என் கடுமையும் கோபமும் உன் மேல் குறையாது
இது இன்றைய உலகின்  அன்பு
இதை நடத்தும் மனிதம் உண்டு

எங்கே மறைந்தது பாசம்
எங்கே தொலைந்தது பண்பு
எங்கே சிதைந்தது நேசம்
இங்கே மறைந்தது அன்பு

சுற்றுச்சூழலின் மாசு விலகலாம்
நதி நீர் எல்லாம் ஒன்று சேரலாம்
செல்வமும் சிறப்பும் பெருகி நிரயலாம்
மனிதம் ஆகுமே அனாதையாய்

Comments

Popular posts from this blog

பால் அரியா உறவு

பால் அரியா ஒரே உறவு சண்டை சமரசம் சட்டை செய்யாது தூரம் நேரம் வித்தியாசம் அரியது விதிகள் இல்லா ஓர் உறவு - நம் நட்பு வகுப்பறை காணாது என் முகம் புத்தகம் பார்க்காது என் கண்கள் தேர்வு வரும் முன்னே உன் மிரட்டலுக்கு ஒடுங்குவேன் நான் தேர்வு முடிந்த பின்னும் என்னை விட ஓர் இரு மதிப்பெண் குறைவாய் எடுத்து என்னை ஊக்குவித்த உறவு நீ கையில் சில்லறை இல்லாதபோதும் புட் கோர்ட்டில் தாராளமாய் அள்ளி அள்ளி எடுத்து உண்டி கொடுத்த உறவு நீ கல்லூரி கால நினைவுகளை கணவாய் மறக்காது நினைக்கும் பொழுதெல்லாம் நிஜமாக்கும் உறவு நீ அறிவியல் துறவியல் என்றவனை ஆசை பற்பல காட்டி தோள் தட்டி தூக்கிவெய்த்து உண்மையான உறவு நீ திசை மாறியது இரு நதியின் பாதை நினைவுகள் ஆனது நிகழ்வுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் - என் மனதில் இனிமை நிறைக்கும் உறவு நீ

காலை

வெண் மேக கூட்டங்கள் காற்றில் படர பால் நுரை கூட்டங்கள் என் வடிநீர் கோப்பையில் நகர அதனை உறிஞ்சும் போது கிடைக்கும் மலர்ச்சி தேனி கூட்டங்களும் தோற்குமே - என்னுடன் சுறுசுறுப்பில் போட்டி போட்டால் எரும்புகளும் நின்று பார்க்குமே என் புத்துணர்ச்சி அலையை