கவிதை எழுத தொடங்குகிறேன்
வார்த்தைகள் பஞ்சம்
என் வாழ்கை வரய தொடங்குரிறேன்
அதில் மனிதர்கள் பஞ்சம்
அன்னையும் தந்தையும் வாழ்வின் கர்த்தா
வெற்று காகிதத்தில் ஓர் கரி கோடு
ஒன்றுமே இல்லாத காய்ந்த நிலத்தில்
எதிர்பார்ப்போடு ஓர் விதை
வளரும் பயிரும் வரையும் ஓவியமும்
தன்னந்தனியே தேர் இழுக்காது
ஊர் கூடி வண்ணம் பூசி
உரம் போட்டு பெரியதாகும்
வாழ்கை தத்துவம் இதுவே ஆகின – என்
வாழ்கை தத்துவம் இதுவே ஆகின – என்
வாழ்வின் வண்ணம் எதுவோ – என்
வாழ்வின் உரம் எதுவோ
என்றுமே உபயகோகிக்கத அந்த
சின்னஞ்சிறு மூளையை
உருக்கி பொழிந்து யோசித்தேன் – இந்த
கேள்விக்கு பதில் அறிய
ஒரு நாள் விளங்கியது – ஆம்
நம் வாழ்வின் உரம் நட்பு
நம் வாழ்வின் நிறம் நட்பு
என் வாழ்வின் அர்த்தம அதுவே
ஆட்டம் பாட்டம் எல்லாம் நிறைய
வாழ்வின் மூலம் அறிந்த இன்பம்
தேடி ஓடி ஆடி பாடி
களித்தேன் இன்ப தேன்
களைப்பில் ஆய்ந்து மகிழ்ச்சியில் மலைத்து
சோர்ந்து வந்து அமரும் போது
சுற்றி சுற்றி பார்கிறேன் – என்
உரம் நிறம் எல்லாம் மறைந்தன
திராணி இருக்கும் வரை
நான் நினைத்த உரம் நிறம் அது வரை
தெம்பு இருக்கும் வரை
நான் நினைத்த வாழ்வின் மூலம் அது வரை
முதலில் தனிமை அது நகர்ந்தது
பின்பு பயம் அதுவும் பறந்தது
அதன் பின் வெறுமை சற்றே நிலைத்து
அ(இ)ன்று புரிந்தது என் வாழ்வின் கரு
விதையும் பொழுதே உள்ளே இருக்கும் உரம்
வரையும் பொழுதே அதில் இருக்கும் நிறம்
உள்ளே இருக்கும் உள்ளத்திற்கு
அதுவே ஆகும் உரமும் நிறமும்
உள்ளது இன்னும் வார்த்தை பஞ்சம்
உரம் இல்லாததால் நடுங்குகிறது நெஞ்சம்
ஒரு நாள் வரும் என் வாழ்வில் வண்ணம்
அன்று முடிப்பேன் இக்கவிதையை – இது திண்ணம்
Comments
Post a Comment