விரக தாபம் வாட்டுதே - உன்தன்
நிழல் இன்றி இம்மரம் வாடுதே
உன் பார்வை அணைத்த இத்தேகம் - உன்தன்
இதழ் அமுதின்றி காயுதே
மண்ணில் எழுதிய உன் பெயர்
காற்றில் எழுதியதார் போல் கரையுதே - என்
உள்ளில் நான் எழுதிய உன் பெயர்
பசுமரத்தாணி போல் ஊருதே
துணை இன்றி ஆடுகிறேன் தனிமை சூறாவளியில்
இலையுதிர் காலம் போல் நான் கிளை நுணியில்
காய்ந்து சருகாகி உயிர் மரிக்க துணிவேனோ
விழுந்தாலும் உன் காலடி அன்றி வேறேதோ
நீரில் விழுந்த எரும்பானேன்
என்னை கரையேற்றும் சருகவாயா
விரக முதலையின் வாயில் கஜம் நானோ
என்னை காக்கும் கஜேந்திரன் ஆவாயோ
என்ன பாவம் இப்பிறவியை பெறச்செய்தேனோ
உன்னை விட கருணை கொண்டவன் தருமனோ
உன் கரம் தழுவிய இத்தேகம்
உன் விரல் தொட நாடுதே
சலனம் இல்லா தனிமை சாகரம்
தோணியை வருவாய் கரை ஏற்ற
தனிமையில் மறக்கிறேன் என்னிலை ஆவேன்
என் நிலை அறியாயோ வேல் விழி மண்ணா!
Comments
Post a Comment