Skip to main content

ராதிகா தவ விரஹே

விரக தாபம் வாட்டுதே - உன்தன்
நிழல் இன்றி இம்மரம் வாடுதே
உன் பார்வை அணைத்த இத்தேகம் - உன்தன் 
இதழ் அமுதின்றி காயுதே

மண்ணில் எழுதிய உன் பெயர்
காற்றில் எழுதியதார் போல் கரையுதே - என்
உள்ளில் நான் எழுதிய உன் பெயர்
பசுமரத்தாணி போல் ஊருதே

துணை இன்றி ஆடுகிறேன் தனிமை சூறாவளியில்
இலையுதிர் காலம் போல் நான் கிளை நுணியில்
காய்ந்து சருகாகி உயிர் மரிக்க துணிவேனோ
விழுந்தாலும் உன் காலடி அன்றி வேறேதோ


நீரில் விழுந்த எரும்பானேன்
என்னை கரையேற்றும் சருகவாயா
விரக முதலையின் வாயில் கஜம் நானோ
என்னை காக்கும் கஜேந்திரன் ஆவாயோ

என்ன பாவம் இப்பிறவியை பெறச்செய்தேனோ
உன்னை விட கருணை கொண்டவன் தருமனோ
உன் கரம் தழுவிய இத்தேகம்
உன் விரல் தொட நாடுதே

சலனம் இல்லா தனிமை சாகரம்
தோணியை வருவாய் கரை ஏற்ற
தனிமையில் மறக்கிறேன் என்னிலை ஆவேன்
என் நிலை அறியாயோ வேல் விழி மண்ணா!

Comments

Popular posts from this blog

நட்பு

தண்டவாளங்கள் இரண்டு எங்கோ சிறிது தூரம் ஒன்றாய் செல்லும் நட்பெனும் தண்டவாளங்களும் சேர்ந்து சென்றால் தான் நண்பர்கள் வாழ்க்கை பயணத்தின் அப்பகுதியை கடக்க முடியும் பிரியும் நேரம் வரின் தங்கள் பாதையை நோக்கி அவை பிரியும் ஒன்றாய் முழு நேரமும் இருக்க நினைத்தால் மாறி போகுமே அவற்றின் சேரிடம் நிலை எதுவும் இல்ல இருக்கும் வரை நட்பை போற்ற நினை மனமே பிரியும் நேரத்தில் பெரிதாய் வருந்தாதே பிரிவு உனக்கு மட்டும் அல்ல மற்றவருக்கும் நல்லதுவே!

நினைவுகள்

சுவர்கள் நான்கின் நடுவே தனியாய் இருத்தல் பயம் அல்ல நினைவுகள் வாழும் ஓர் அறையில் துணிந்து செல்ல முடியவில்லை நீ இருந்த இடம் இன்று காலியாய் இருக்கும் ஆனால் உன் பிம்பம்கள் என்னை வேலியை சுற்றி வருகிறதே உன் வாசம் மறையவில்லை உன் குரலின் எதிரொலி குறையவில்லை நான் பேசும் போதெல்லாம் உன் குரல் கேட்கிறதே நம் இனிமை நினைவுகளை நினைக்கிறன் என் கண்களில் காவிரி பெருக்க

வாழ்கையின் கோணங்கள்

எங்கெங்கோ பிறந்தவர்களை ஒன்று சேர்க்கும் தொடர்பேதும் இல்லாதவர்களை இணைக்கும் நடமாடும் வேலை தன்னில் பாதையை மறைக்கும் கால்கள் சோர்வடையும் பொது புதிய பாதை தோன்றும் உணர்வுகள் இல்லாதவருக்கும் காதல் தாக்கும் ஆசை பாசம் இருப்பவருக்கும் உண்மை நட்பு கூட கிடைக்காது பணம் இருப்பவனிடம் திறமை இருக்காது திறமை இருப்பவனிடம் பணம் இருக்காது உறவு பிரியனிடம் பணம் இருக்கும் பணப்பிரியனிடம் உறவு நிலைக்காது இவை எல்லாம் வாழ்கையின் கோணங்கள்!! எந்நேரமும் எதுவாயினும் நடப்பின்’ கவலை கொல்லாதே மனமே இன்றொரு சந்தர்பம் போயின் பின்னொரு நாள் மற்றொன்று வந்து சேரும் பி. கு. தேர்வு அறையில் யோசித்து கொண்டு இருந்த பொது உதயமானது இந்த சிந்தனை. எப்படி படித்து சென்றாலும் எனக்கு தெரிந்த கேள்விகளே வருவதில்லை. வாழ்கை கற்றுதந்த பாடம்.