வானவில் தோரணங்கள்
தேனமுது கீதங்கள்
கை நிறைக்கும் பொன்னும்
மனம் நிறைக்கும் பொருளும்
வாய் நிறைக்கும் உணவும்
இடம் நிறைக்கும் உறவும்
என்றும் நிலையல்ல!
பாறை வழியும்
முட் பயணனும்
துயர் இருளும்
தனிமை அறையும்
வற்றும் பசியும்
உருக்கும் தாபமும்
உறுத்தும் மன கணங்களும்
என்றும் நிலையல்ல!
இந்த நிமிடம் உண்டு
இந்த நொடி உண்டு
மனம் நினைப்பது உண்மை
மற்றவரிடம் எதிர் பார்ப்பது மடமை
நிலைப்பது சில
அவற்றுள்
உணர்வுகள் நினைவுகள் பிரதானம்
வாழ்கை முழுவதையும் யோசித்து
மலைத்து சிரமப் படுவதை விட
இந்த நொடியை மட்டும் வாழ்ந்து
இன்பப்படுவது மேல்...
அத்தனைக்கும் ஆசை படலாம்
ஆனால் அவை நிலைப்பது கடினம்
Comments
Post a Comment