முதுமை - வாழ்க்கையின் கேட்க்கா வரம்
முதுமையில் தனிமை - வரம் என்னும் சாபம்
ஊமை பகலும் தனிமை இரவும்
கடக்கும் தெம்பு உடலில் இல்லை
ஊணும் வற்றி ரத்தம் சுண்டி
சுமக்கும் வலுவும் மனதில் இல்லை
முழங்கை மெதுவாய் மேலெழுப்பும்
சத்து உடலில் குறைவு தான்
இருப்பிலிருந்து மேலெழ
பிடிப்பு ஒன்று தேவை தான்
கூடி வாழ்ந்த காலத்தை
நினைவு கூறும் தனிமை இது
ஓடி ஆடிய நாட்களை
நினைத்து பார்க்கும் வயது இது
மௌனம் சூழும் நிமிடம் எல்லாம்
மனதில் எதிர் ஒலிக்கும் சத்தங்கள்
பகலும் இறவென்று சாதிக்குமே
உடல் வலியை போக்கவா
மன வலியை ஆற்றவா
யோசித்து கொண்டே நகருகையில்
கண்களும் கசியுமே !!
Comments
Post a Comment