காதலுக்கு கண்கள் இல்லை
இது உருவகம்
உணர்வுகள் பிறக்கும் மூளையும் குருடு
இது உண்மை
வாழ்க்கை படலம்-அதில்
பலருக்கு உண்டு பாத்திரம்
முடிவில்லா உணர்ச்சி கதையில்
கணக்கில்லா உறவுகள்
கணக்கில்லா கதாபாத்திரங்களும்
தனக்கென இருக்கும் ஓர் படலத்தில்
சொல்ல தெரியா உணர்ச்சிகளை
மென்று தின்று விழுங்கும்
அவ்வப்போது சங்கமிக்கும்
இருவர் தடம் - இதில்
தன் வழி மறந்து
தடம் புரளும் சிலர் இதயம்
பாதை பாதி கடப்பின்
கேள்வி எழும் இது சரியா என
முன்னே செல்லவும் முடியாது
பின்னே வரவும் தெரியாது
குருடனாய் அலையும்
இதயம்
அந்த பேராபத்தை தடுக்க
படைத்தவனே நினைத்தாலும்
போவானே
கீழ்பாக்கம்
Comments
Post a Comment