காற்றில் மிதந்தேன்
வானூர்தியில் கடல் தாண்டி
காற்றில் மிதந்தேன்
நான் விதைத்த ரோஜாவை பார்க்க
காற்றில் மிதந்தேன்
கடல் தாண்டி என் கண்மணியை காண
காற்றில் மிதந்தேன்
நான் சுமந்த உயிரை தழுவ
கற்பணயில் கண்ட அந்த முகத்தை
கனவில் கேட்ட அந்த குரலை
நினைவில் கொண்ட அந்த புன்னகையில்
காண மண்ணில் இறங்கினேன்
அந்த முகம் அதே புன்னகை
அதே மினுக்கும் கண்கள்
மேலும் வளர்ந்த என் கன்று- இன்று
சான்றோர் போற்றும் பூ சென்று
சொல்ல தெரியா இன்பம்
இதயம் கொள்ளாத மகிழ்ச்சி
மடை திறந்ந்த வெள்ளம் போல்
பொங்கி வரும் பாசம்
அடக்க முடியாத கண்ணீர்
செய்வதரியாது நின்றேன்
அன்று புரியவில்லை அதன் அர்த்தம்
ஈன்ற பொழுதின் இன்பம்
இன்று உணர்ந்தேன்
ஈன்ற பொழுதின் பெற்ற இன்பத்தினை
கண்டேன் என்னுள் வளர்ந்த உயிரை
காற்றில் மிதந்தேன்
வானூர்தியில் கடல் தாண்டி
காற்றில் மிதந்தேன்
நான் விதைத்த ரோஜாவை பார்க்க
காற்றில் மிதந்தேன்
கடல் தாண்டி என் கண்மணியை காண
காற்றில் மிதந்தேன்
நான் சுமந்த உயிரை தழுவ
கற்பணயில் கண்ட அந்த முகத்தை
கனவில் கேட்ட அந்த குரலை
நினைவில் கொண்ட அந்த புன்னகையில்
காண மண்ணில் இறங்கினேன்
அந்த முகம் அதே புன்னகை
அதே மினுக்கும் கண்கள்
மேலும் வளர்ந்த என் கன்று- இன்று
சான்றோர் போற்றும் பூ சென்று
சொல்ல தெரியா இன்பம்
இதயம் கொள்ளாத மகிழ்ச்சி
மடை திறந்ந்த வெள்ளம் போல்
பொங்கி வரும் பாசம்
அடக்க முடியாத கண்ணீர்
செய்வதரியாது நின்றேன்
அன்று புரியவில்லை அதன் அர்த்தம்
ஈன்ற பொழுதின் இன்பம்
இன்று உணர்ந்தேன்
ஈன்ற பொழுதின் பெற்ற இன்பத்தினை
கண்டேன் என்னுள் வளர்ந்த உயிரை
காற்றில் மிதந்தேன்
Comments
Post a Comment