Skip to main content

காதல்

மேகத்தின் நடுவே தோன்றும் மின்னல் நீயோ
வானத்தின் நடுவே தொன்றுண் நட்சத்திரம் நீயோ
தேகத்தின் நடுவேதோன்றும் உணர்வுகள் நீயோ
என்  உள்ளத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் காதலே

Comments

  1. nalla irukku daa... naan unkiterundhu innum edhir paakaren...

    ReplyDelete
  2. thx anna :) unga edhir paarpukku eeedu kudukka muyarchikkiren..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தனிப்பயணம்

அன்றொரு நாள் மாலை பொழுது என்னை மறந்து தென்றல் காற்றில் நானும் நடந்தேன் கடற்கரையோரம் என் வாழ்க்கை போகும் பாதையை ஆவல் பெருக்கின் உச்சத்தில் பார்க்க நினைத்தேன் நானும் சற்றே என் கால்களை மெல்ல தூக்கி மறையும் சூரிய காவி கதிர்கள் மாறியது இருட்கதிர்களாய் மேனியை மெல்லியதாய் தொட்ட தென்றலும் புயலாய் மாறியது நாவரண்டு நீரோடியது என் நெற்றியில் பாய்ந்தது முதுகு தண்டில் மின்சாரம் அச்சம் இருளையும் காட்டி வேகமாய் என்னை ஆகொண்டது தூரத்தில் ஓர் ஒளி வட்டம் – என்னை ஓட ஊன்றியது அதனை நோக்கி போகும் பாதையெல்லாம் கேட்டது அழுகையின் ஓலங்கள் பெற்றார் உற்றார் நண்பர்கள் வாழ்வில் நான் கண்ட முகங்கள் யாவையும் ஓடும் வழிதனிலே கண்டேன் பிம்பங்களாய் ஓடினேன் வேகமாய் இருளை கண்டு ஓடினேன் வேகமாய் அழுகையை கேட்டு ஓடினேன் வேகமாய் பிம்பங்களை கண்டு ஓடினேன் அச்சத்தின் உச்சத்தில் தூர கண்ட வெண் ஒளி பெரியதாய் பெரியதாய் வளர்ந்தது அடைந்தேன் அவ்விடத்தை படர்ந்தது ஒளி என்னை சுற்றி சிரித்தேன் அழுதேன் அந்த ஒரு நிமிடம் இடம் புரியா இன்பம் அது பயம் மறைந்த நிமிட...

அபூர்வ உறவு

ஓர் ஆணின் வாழ்வில் எத்தனையோ உறவுகள் அன்னை தந்தை மனைவி மக்கள் எல்லார்க்கும் வாழ்வில் கிட்டாது தங்கை என்னும் ஓர் பெண்ணின் உறவு தங்கை இல்லாதவன் துர்பாக்கியசாலியோ சொல்ல தெரியவில்லை எத்தனை வகையாக பாசத்தை பிரித்தாலும் அண்ணன் தங்கை பாசம் உயிருடன் பின்றிய உறவு சொல்ல தெரியவில்லை கடற்கரையில் அவள் கட்டிய மணல் வீடு சரிந்தால் அண்ணன் மனம் சரிவதேன் சொல்ல தெரியவில்லை மணம் ஆகி புது வீடு புகும் அவளை உன் வீடு இனி அதுவே என்று அண்ணன் மணம் கண்ணீர் மறைத்து வழி அனுப்பிவிடுமே - சொல்ல தெரியவில்லை தங்கையின் காதலனோ தந்தை கூட பொருட்டல்ல - அவள் அண்ணனை கண்டு நடுங்குவதேன் சொல்ல தெரியவில்லை அண்ணன் தங்கை இருவரும் இரு தனி குடும்பங்கள் ஆகியும் இவள் அண்ணன் வீடு வரும் நாளோ என்றும் திருவிழாதானே கறுப்பை ஒன்றை பகிர்ந்த உறவு பாச கோடி ஒன்றை பகிரும் இரவு இவள் என்றுமே அண்ணனின் குல தெய்வம் இவன் என்றுமே தங்கையின் தகப்பன் சாமி

உள்ளத்தின் ஆழ்குரல்

கவிதை எழுத தொடங்குகிறேன் வார்த்தைகள் பஞ்சம் என் வாழ்கை வரய தொடங்குரிறேன் அதில் மனிதர்கள் பஞ்சம் அன்னையும் தந்தையும் வாழ்வின் கர்த்தா வெற்று காகிதத்தில் ஓர் கரி கோடு ஒன்றுமே இல்லாத காய்ந்த நிலத்தில் எதிர்பார்ப்போடு ஓர் விதை வளரும் பயிரும் வரையும் ஓவியமும் தன்னந்தனியே தேர் இழுக்காது ஊர் கூடி வண்ணம் பூசி உரம் போட்டு பெரியதாகும் வாழ்கை தத்துவம் இதுவே ஆகின – என் வாழ்கை தத்துவம் இதுவே ஆகின – என் வாழ்வின் வண்ணம் எதுவோ – என் வாழ்வின் உரம் எதுவோ என்றுமே உபயகோகிக்கத அந்த சின்னஞ்சிறு மூளையை உருக்கி பொழிந்து யோசித்தேன் – இந்த கேள்விக்கு பதில் அறிய ஒரு நாள் விளங்கியது – ஆம் நம் வாழ்வின் உரம் நட்பு நம் வாழ்வின் நிறம் நட்பு என் வாழ்வின் அர்த்தம அதுவே ஆட்டம் பாட்டம் எல்லாம் நிறைய வாழ்வின் மூலம் அறிந்த இன்பம் தேடி ஓடி ஆடி பாடி களித்தேன் இன்ப தேன் களைப்பில் ஆய்ந்து மகிழ்ச்சியில் மலைத்து சோர்ந்து வந்து அமரும் போது சுற்றி சுற்றி பார்கிறேன் – என் உரம் நிறம் எல்லாம் மறைந்தன திராணி இருக்கும் வரை நான் நினைத்த உரம் நிற...