Skip to main content

யாரோ நீ???

ஒரே கருப்பையை பகிராத பாசமலர்கள் நாம்

ஒன்றாய் ஆட்டம் பாட்டம் ஆரவாரம் செய்யாத நண்பர்கள் நாம்
ஒரே வகுப்பில் மேஜை பகிராத மாணவர்கள் நாம்
ஒன்றாய்  நேரம் பகிராத உறவினர் நாம்

சேர்ந்து பிடி சோறு தின்ற இரவுகள்
சேர்ந்து கை பிடித்து நடந்த பாதைகள்
பகிர்ந்த  நினைவுகள் மலர்ந்த உறவுகள்
கடல் தாண்டி நீ வசித்தாலும்
எங்கே நீ என்று தேடி வரும் உணர்வுகள்

என் இன்பமும் துன்பமும்
முகம் கண்ட உடன்
அறியும் திறமைசாலி

என்னை தட்டி கொடுக்கும்
தன்னம்பிக்கை ஊற்றே
உன்னுடன் ப்ஹேஸ்புக் நட்பு கொள்ள
என்ன தவம் செய்தேனோ.....


Comments

  1. enna thavam seydheno ippadi FByil pala natpu kolla adhilum un paasathaal oru kavadhai enakkendru pera :D :D

    ReplyDelete

Post a Comment